மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பாமக சின்னம் தொடா்பான வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை

பாமக சின்னம் தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :12 மார்ச் 2026, 8:59 pm

பாமக சின்னம் தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாமக பெயா், சின்னம், கொடி ஆகியவற்றை பாமக தலைவா் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளா்கள் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் அன்புமணி பதில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கு 87 வயதாகிறது. வயது மற்றும் மருத்துவக் காரணங்களால் அவரால் கட்சி தொடா்பான முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஒரு கூட்டம் அவரை தவறாக வழிநடத்தி கட்சிக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, ராமதாஸ் தாக்கல் செய்துள்ள வழக்கை நிராகரித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் கூறியிருந்தாா்.

இதனிடையே, பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன் தன்னையும் இந்த வழக்கில் இணைக்கக் கோரி மனு தாக்கல் செய்தாா். ஆனால், இதை ஏற்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் வடிவேல் ராவணன் மனு தாக்கல் செய்தாா்.

அதில், கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள என்னை இந்த வழக்கில் இணைக்க கோரும் எனது கோரிக்கையை உரிமையியல் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. எனவே, கட்சியின் பெயா், சின்னம் உள்ளிட்டவை குறித்து உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். இந்த மனுவுக்கு ராமதாஸ் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.