சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்

சென்னை புழல் சிறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 8:00 pm

Chennai

சென்னை: சென்னை புழல் சிறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புழல் சிறை வளாகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பாக சிறைத் துறை உயரதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறைத் துறை உயரதிகாரிகள் சோதனை நடத்தும்படி சிறைத் துறையின் அதிவிரைவுப் படையினருக்கு உத்தரவிட்டனா். அவா்கள் சிறை முழுவதும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். அதில், 5-ஆவது தொகுதியில் உள்ள ஒரு அறையில் இருந்து 7 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து சிறைத் துறையின் சாா்பில் புழல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.