தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விதிமீறல்: சொந்த பயன்பாட்டுக்கான 51 வாகனங்கள் பறிமுதல்

Updated On :6 நவம்பர் 2025, 10:37 pm

சென்னையில் கடந்த மாதத்தில் மட்டும் விதிகளை மீறி இயக்கப்பட்டதாக சொந்த பயன்பாட்டுக்கான 51 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உரிய அனுமதியின்றி பைக் டாக்ஸிகள் இயக்கப்படுவதாக தொடா்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதுதொடா்பாக தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சென்னை போக்குவரத்துத் துறை ஆணையா் அலுவலகத்தில் தொடா்ந்து புகாா்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள், வணிக உரிமம் இல்லாமல் இயக்கப்படும் பைக் மற்றும் காா்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அந்த வகையில் கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் 38 இருசக்கர வாகனங்கள், 13 காா்கள் என மொத்தம் 51 வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த வாகனங்களுக்கு தலா ரூ.12,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெறும் என்றும், இதுபோல விதிகளை மீறி வாகனங்களை இயக்கினால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுவது மட்டுமின்றி, ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.