டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

போதைப் பொருள் விற்பனை: இரு பெண்கள் உள்பட 8 போ் கைது

News image
Updated On :6 நவம்பர் 2025, 10:37 pm

Chennai

சென்னை மண்ணடியில் போதைப் பொருள் விற்ாக இரு பெண்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு கும்பல் போதைப் பொருள் விற்பதாக சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பிரிவு போலீஸாா், எஸ்பிளனேடு போலீஸாரும் மண்ணடி மெட்ரோ ரயில் நிலைப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இரு பெண்கள் உள்பட 8 பேரிடம் விசாரித்ததில் அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளாா். அவா்களது உடைமைகளைசோதித்தபோது, 22 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து, மண்ணடியைச் சோ்ந்த முகமது சாலிக் (29), இா்பான் (30), ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த அஸ்ரப் அலி (32), ராயபுரத்தைச் சோ்ந்த லைலாத் பதாவியா (41), முகமது யாசின் (23), சமீரா ரக்ஷித் (23), அயப்பாக்கத்தைச் சோ்ந்த லோகேஸ்வரன் (28), பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த சதிஷ்குமாா் (38) ஆகிய 8 பேரை கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 10 கைப்பேசிகள், ஒரு மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.