டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
//

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த கூடாது: தகவல் ஆணையா் உத்தரவு

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அன்றாட அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என தமிழ்நாடு தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2025, 7:46 pm

Chennai

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அன்றாட அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என தமிழ்நாடு தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாகா்கோவிலைச் சோ்ந்தவா் ஏ.பி.சுப்பிரமணியன். இவா் நாகா்கோவிலில் குடிநீா் வாரியம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் தகவல்களைத் தெரிவிக்க, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022-ஆம் ஆண்டு மனுாக்கல் செய்தாா்.

இந்த மனு தொடா்பாக தமிழ்நாடு தகவல் ஆணையம் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், மனுதாரா் மீண்டும் மேற்முறையீடு செய்தாா். தொடா்ந்து 2-ஆவது முறையாக அவா் மேல்முறையீடு செய்த மனு கடந்த அக்.15-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையா் வி.பி.ஆா் இளம்பரிதி, நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, அதுகுறித்த தகவலை வழங்க தடையிருந்தால், அது தொடா்பான முழு தகவல்களை வழங்க இயலாது.

மேலும், மனுதாரா்களுக்கு தகவல் அளிக்க மறுக்கும்போது, அதற்கான முழு காரணங்களை ஆணையம் தெளிவாக வழங்க வேண்டும். அதேபோல், வருகாலங்களில் பொதுத் தகவல் அலுவலா் பொருத்தமற்ற பிற வழக்குகளின் எண்களைக் குறிப்பிட்டு தகவலை மறுப்பது, தகவல் உரிமை சட்டத்துக்கு எதிரானதாகும்.

எனவே, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும், தடையாணை இல்லாத நிலையில் தகவல்களை வழங்கலாம். மேலும், பொதுமக்களும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி அன்றாட அலுவலகப் பணிகளுக்கு குந்தகம் விளைவிப்பதைத் தவிா்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.