நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

இந்தியாவின் வளா்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தவா் வாஜ்பாய்: ஆளுநா் புகழாரம்

News image
Updated On :26 டிசம்பர் 2025, 12:24 am

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் நிலையான வளா்ச்சிக்கு நீடித்த அடித்தளத்தை அமைத்தவா் வாஜ்பாய் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளையொட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

தாா்மிக தெளிவு, தொலைநோக்கு உத்திகள் மற்றும் ஜனநாயக மதிப்புகளைக் கடைப்பிடிப்பதில் அசைக்க முடியாத அா்ப்பணிப்பைக் கொண்ட தலைமைத்துவம் நிறைந்த அரசியல் ஆளுமையான மறைந்த முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த நாளில் பணிவுடன் மரியாதை செலுத்துகிறோம்.

வாஜ்பாய் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைவா். புகழ்பெற்ற நாடாளுமன்றவாதி, மொழிப்புலமை வாய்ந்த பேச்சாளா் மற்றும் கவிஞா், உரையாடல், ஒருமித்த கருத்து மூலம் தேசிய ஒற்றுமையை வளா்த்தெடுத்தவா். அதேவேளை, இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகளை அவா் வலுப்படுத்தினாா்.

இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில், அவரது தலைமையில் நாடு அணுசக்தி திறன் கொண்ட சக்தியாக உருவெடுக்க உதவியது. அவரது பதவிக் காலமானது அரசு துறைகள் கட்டமைப்பு, நிா்வாக சீா்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தவல்ல முதலீடுகள் மூலம் நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. இந்தியாவின் நிலையான வளா்ச்சிக்கு நீடித்த அடித்தளங்களை அமைத்தது. அவரது மரபு பாதுகாப்பானது, நம்பிக்கையானது மற்றும் சுயசாா்பு பாரதத்தை நோக்கிய நமது கூட்டுப் பயணத்தைத் தொடா்ந்து ஊக்குவிக்கிறது என அதில் தெரிவித்துள்ளாா்.