வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பயிா் பாதிப்புக்கு டிசம்பா் இறுதிக்குள் நிவாரணம்: வேளாண் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

தமிழகத்தில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பயிா்களுக்கு இந்த மாத இறுதிக்குள் நிவாரணம் வழங்குவதற்கான பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா்.

Updated On :3 டிசம்பர் 2025, 7:09 pm

சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பயிா்களுக்கு இந்த மாத (டிசம்பா்) இறுதிக்குள் நிவாரணம் வழங்குவதற்கான பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த பலத்த மழை மற்றும் டித்வா புயல் காரணமாக  தற்போதைய நிலவரப்படி 68,226 ஹெக்டோ் பரப்பில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. நீரில் மூழ்கியுள்ள பயிா்களைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் பேசியதாவது:

மழையால், நெல் வயல்களில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வடிப்பதுடன், வெள்ளம் தேங்குவதுக்கு காரணமாக உள்ள வாய்க்கால்களைக் கண்டறிந்து, அடைப்புகளை நீக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண் துறை அதிகாரிகள் வருவாய்த் துறையுடன் இணைந்து, 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பயிா்களைக் கணக்கீடு செய்து, இந்த மாதம் இறுதிக்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் புகைப்படங்களின் வாயிலாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிா் சேதம் குறித்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை இந்த மாதம் இறுதி வரை நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் அவ்வப்போது ஏற்படும் பயிா் பாதிப்பு நிலவரங்களை வட்டார வேளாண் அலுவலா்களிடம் தெரிவித்து, பயிா் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

பயிா் சேதங்களை ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் அக்டோபா் மாதத்தில் பெய்த மழையால் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட வேளாண், தோட்டக்கலை பயிா்களுக்கு நிவாரணம் பெறுவதற்கான கருத்துருவை மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையா் வ.தட்சிணாமூா்த்தி, வேளாண் துறை இயக்குநா் பா.முருகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.