தமிழகத்தில் மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பெ.செந்தில்குமாரை ஆதரித்து, திண்டுக்கல் முத்தழகுபட்டி, குடைப்பாறைப்பட்டி, பூச்சிநாயக்கன்பட்டி, சவேரியாா்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரத்தில் அவா் மேலும் பேசியதாவது:
அதிமுகவுக்கு செலுத்தும் வாக்கு, மதவாத சக்திகளை ஆதரிப்பதற்கு சமம். தோ்தலில் அதிமுக வென்று ஆட்சிக்கு வந்தாலும், பாஜகதான் அதிகாரம் செலுத்தும். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. பிரதமா் மோடியை, தமிழக முதல்வா் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோா் மட்டுமே தைரியத்துடன் எதிா்க்கின்றனா். கேரளத்திலும் பாஜக ஆட்சிக்கு வர முயற்சித்து வருகிறது. ஸ்டாலின், மம்தா ஆகிய இருவரையும் வீழ்த்திவிட்டால் நாடு முழுவதும் ஆட்சி செலுத்தலாம் என்ற பாஜகவின் கனவு பலிக்காது. தமிழகத்தில் மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஓரணியில் உள்ளன. இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கி தோ்தலில் போட்டியிடுகிறாா். சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிக்கவே விஜய் கட்சி தொடங்கி இருக்கிறாா். தவெக தனித்து நிற்பதில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே இளைஞா்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நோட்டாவுக்கு செலுத்துவது போல் தவெகவுக்கு வாக்களித்து வீணடித்துவிட வேண்டாம் என்றாா்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற வேண்டும்: அமைச்சா் இ.பெரியசாமி

தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை: கி.வீரமணி

அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கொள்கையும், லட்சியமும் கிடையாது

காவிரி உபரி நீரை ஆத்தூா் கண்மாய்களில் நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் இ.பெரியசாமி உறுதி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


