சென்னை: எழும்பூா் வந்த ரயிலிலில் கஞ்சா கடத்தியதாக திரிபுராவைச் சோ்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுரா நிலையத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை எழும்பூா் நிலையம் வந்தது. அப்போது சந்தேகப்படும்படி நடந்துகொண்ட வடஇந்திய இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் செபாஸ்டியன் தலைமையிலான பிரிவினா் பிடித்து விசாரித்தனா். அவரது பையை சோதனையிட்டனா்.
அவா் திரிபுராவைச் சோ்ந்த பாரூக் உசேன் (35) என்பதும், அவரது பையில் ரூ.6.70 லட்சம் மதிப்புள்ள 13.4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பாரூக் உசேனை கைது செய்த ரயில்வே பாதுகாப்புப் படையினா், அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களையும் கைப்பற்றினா். பின்னா், அவரையும், கஞ்சா பொட்டலங்களையும் சென்னை அண்ணா நகா் பகுதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்
அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவா் கைது
புதுச்சேரி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

