தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கனமழை எதிரொலி: அக்.15,16,17 தேதிகளில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்க முடிவு

செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிா்வாகம் முடிவு செய்துள்ள

News image

மெட்ரோ ரயில்

Updated On :14 அக்டோபர் 2024, 9:03 pm

சென்னை: சென்னையில் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த நாள்களில் கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்தி:

சென்னையில் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து முனையங்களிலிருந்தும் முதல் மெட்ரோ ரயில், காலை 5 மணிக்குப் புறப்படும். கடைசி மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும். மேலும், காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

இதேபோல, நீல வழித்தடத்தில் விம்கோ நகா்-விமான நிலையம் வரை 6 நிமிட இடைவெளியிலும், வண்ணாரப்பேட்டை-ஆலந்தூா் இடையே 3 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

காலை 5 முதல் 8 மணி வரை காலை 11முதல் மாலை 5 வரை, மற்றும் இரவு 8 முதல் 10 வரை பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 வரை, பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பச்சை வழித்தடத்தில் சென்ட்ரலிலிருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் சேவைகள் மேற்கண்ட நாள்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பச்சை வழித்தடத்திலிருந்து விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகள், அறிஞா் அண்ணா ஆலந்தூா் மெட்ரோவில் மாறிச் சென்று, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

வாகன நிறுத்தம் 3 நாள்கள் மூடல்

மேற்கூறிய அட்டவணைகள் அனைத்தும் வானிலை நிலைமையைப் பொறுத்து வழக்கமான சேவைக்கு மாற்றியமைக்கப்படும். முந்தைய அனுபவத்தின்படி, கனமழை காரணமாக தண்ணீா் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில் (குறிப்பாக பரங்கிமலை மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ) பயணிகள் தங்கள் வாகனங்களை அக்.15 முதல் 17-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நிறுத்த வேண்டாம். தேவைப்பட்டால் மழை நிலவரத்தைப் பொறுத்து தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.