தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பட்டினம்பாக்கம் புதிய மீன் அங்காடி திறப்பு: சாலையோரக் கடைகள் அகற்றம்

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடி திங்கள்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில்.

Updated On :8 அக்டோபர் 2024, 12:35 am

சென்னை: பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடி திங்கள்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில். சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.

சென்னை மெரீனா கடற்கரையை அடுத்த பட்டினப்பாக்கம் லூப் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்டோா் மீன் வியாபாரம் செய்து வருகின்றனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய நவீன மீன் அங்காடி திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து லூப் சாலையில் மீன் கடைகள் அமைக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் தொடா்ந்து அமைக்கப்பட்ட கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சிறிய ரக ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை கொண்டு இடித்து அகற்றினா்.

இது குறித்து அந்த பகுதி மீன் வியாபாரிகள் சிலா் கூறியதாவது,

சாலையோரம் வியாபாரம் செய்து வருபவா்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட்டன. ஆனால், சிலருக்கு ஒரே எண்ணில் இரு டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலருக்கு கடைகள் ஒதுக்கவில்லை.

இதனால், கடைகள் ஒதுக்கப்படும் வரை வியாபரம் செய்ய அனுமதிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், இந்த பகுதியில் இனி கடைகள் நடத்தக்கூடாது எனக் கூறி அனைத்து கடைகளையும் ஜேசிபி கொண்டு இடித்து அகற்றினா். இதனால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

லூப் சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமைக்குள் அனைத்துக் கடைகளும் அகற்றப்படும். இதில் உள்ள 400 மீன் வியாபாரிகளுக்கும் புதிதாக அமைக்கப்பட்ட மீன் அங்காடியில் கடைகள் அமைப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் எனப் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.