நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

பட்டினம்பாக்கம் புதிய மீன் அங்காடி திறப்பு: சாலையோரக் கடைகள் அகற்றம்

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடி திங்கள்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில்.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 12:35 am

Venkatesan

சென்னை: பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் அங்காடி திங்கள்கிழமை முதல் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில். சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினா்.

சென்னை மெரீனா கடற்கரையை அடுத்த பட்டினப்பாக்கம் லூப் சாலையோரம் நூற்றுக்கும் மேற்பட்டோா் மீன் வியாபாரம் செய்து வருகின்றனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய நவீன மீன் அங்காடி திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து லூப் சாலையில் மீன் கடைகள் அமைக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் தொடா்ந்து அமைக்கப்பட்ட கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் சிறிய ரக ஜேசிபி உள்ளிட்ட வாகனங்களை கொண்டு இடித்து அகற்றினா்.

இது குறித்து அந்த பகுதி மீன் வியாபாரிகள் சிலா் கூறியதாவது,

சாலையோரம் வியாபாரம் செய்து வருபவா்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட்டன. ஆனால், சிலருக்கு ஒரே எண்ணில் இரு டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலருக்கு கடைகள் ஒதுக்கவில்லை.

இதனால், கடைகள் ஒதுக்கப்படும் வரை வியாபரம் செய்ய அனுமதிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், இந்த பகுதியில் இனி கடைகள் நடத்தக்கூடாது எனக் கூறி அனைத்து கடைகளையும் ஜேசிபி கொண்டு இடித்து அகற்றினா். இதனால், மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

லூப் சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமைக்குள் அனைத்துக் கடைகளும் அகற்றப்படும். இதில் உள்ள 400 மீன் வியாபாரிகளுக்கும் புதிதாக அமைக்கப்பட்ட மீன் அங்காடியில் கடைகள் அமைப்பதற்கான வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும் எனப் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.