தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

யூ டியூப் சேனலுக்கு பேட்டி: பெண் தற்கொலை முயற்சி

Updated On :28 மே 2024, 10:29 pm

சென்னை: யூ டியூப் சேனல் ஒன்றுக்கு தான் கொடுத்த பேட்டி கேலிக்குள்ளானதால் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 23 வயது பட்டதாரி பெண் ஒருவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கு சென்றபோது யூடியூப் சேனல் ஒன்றுக்கு காதல் தொடர்பாக இரட்டை அர்த்தங்களுடன் பேட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் பரவி, அந்தப் பெண்ணை பலர் கேலி, கிண்டல்கள் செய்து பதிவிடத் தொடங்கினர்.

பெற்றோர் இல்லாத நிலையில், சகோதரரின் பராமரிப்பில் இருந்த அந்தப் பெண், தான் அளித்த பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்துவிடுமோ என்ற பதற்றத்திலும், மன உளைச்சலிலும் இருந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவர் விஷத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறி வரும் அவரிடம் இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், அந்த யூடியூப் சேனலுக்கு முதலில் பேட்டி தர மறுத்ததாகவும், அனுமதி இல்லாமல் விடியோவை வெளியிட மாட்டோம் என அவர்கள் கூறியதற்கு மாறாக தற்போது செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த யூடியூப் சேனலை நடத்தி வந்த வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராம் (21), உதவியாளர் யோகராஜ் (21), பேட்டி எடுத்த அண்ணா நகரைச் சேர்ந்த ஸ்வேதா (31) ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.