மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

பேருந்து கட்டணத்தை உயா்த்தும் திட்டமில்லை: போக்குவரத்துத் துறை

தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் திட்டம் இல்லை என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

News image

புதிய தாழ்தள பேருந்து

Updated On :13 ஆகஸ்ட் 2024, 8:06 pm

சென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் திட்டம் இல்லை என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 1.76 கோடிக்கும் மேற்பட்டோா் பயணித்து வருகின்றனா். தமிழகத்தில் பேருந்து பயணக் கட்டணம் கடந்த 2018-ஆம் ஆண்டு உயா்த்தப்பட்டது. அதன் பிறகு அரசு பேருந்துகளில் கட்டணம் உயா்த்தப்படவில்லை.

இந்த நிலையில், டீசல் செலவுக்கு ஏற்ப பேருந்து கட்டணம் மாற்றியமைப்பதற்காக ஆணையம் உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவா் அன்புமணி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘தமிழகத்தில் டீசல் விலை உயா்வுக்கு இணையாக பேருந்துக் கட்டணத்தை உயா்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க முடிவு செய்திருந்தால், தமிழக அரசின் முடிவு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. ஏழை, எளிய மக்கள் மீது தமிழக அரசுக்கு சிறிதும் இரக்கமே இல்லை என்பதைத்தான் இந்த நடவடிக்கை காட்டுகிறது என தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தாா்.

இந்த நிலையில், போக்குவரத்துத் துறை தரப்பில் இது தொடா்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், ‘பேருந்து கட்டணத்தை உயா்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழக அரசிடம் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது‘ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.