நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

1487 கிராம் தங்கத்தை கையில் கடத்தி வந்த ஏர் இந்தியா ஊழியர் கைது

1487 கிராம் தங்கத்தை கையில் மறைத்துக் கடத்தி வந்த ஏர் இந்தியா ஊழியர், கொச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:42 am

ANI

கொச்சி: 1487 கிராம் தங்கத்தை கையில் மறைத்துக் கடத்தி வந்த ஏர் இந்தியா ஊழியர், கொச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வயநாடு பகுதியைச் சேர்ந்த ஷாஃபி என்பவர் பற்றி சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. பஹ்ரைன் - கோழிக்கோடு - கொச்சி இடையே இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தின் ஊழியர் ஷாஃபி தங்கம் கடத்தி வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து அவரை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, அவர் தனது கையில் தங்கத்தை கூழ் போல ஆக்கி கையில் கட்டுப்போடுவது போல கட்டிவிட்டு, வெறும் சட்டைக் கையால் மறைத்துக் கொண்டிருந்ததும், ஊழியர்களுக்கான வழியில் அவர் எந்த சோதனையிலும் சிக்காமல் தங்கத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.

அவரது கையில் இருந்தது 1487 கிராம் அதாவது 6.8 கிலோ எடையுள்ள 3.32 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.