அது செயல்பட்டபோது, மாநகரில் உள்ள பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறை விளக்கப்பட்டது. இதற்காக போக்குவரத்து விதிமுறை குறித்த விளக்கப் பலகைகள், சிக்னல்கள், சாலையில் வைக்கப்படும் சிக்னல் பலகைகள் ஆகியன வைக்கப்பட்டிருந்தன. மேலும் சிக்னல்களுக்கு ஏற்ப எவ்வாறு செயல்பட வேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பது குறித்து ஒரு மாதிரி கார் இயக்கப்பட்டு விளக்கம் கொடுக்கப்பட்டது. மாணவர்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காக அங்கு போக்குவரத்துப் பிரிவு காவலர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இளைய தலைமுறையினர் சாலை விபத்துகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், போக்குவரத்து விதிமுறைகளை தெரிந்துகொள்வதற்கும் போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா பயன்பட்டது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இந்தப் பூங்கா செயல்படாமல் இருப்பது மாணவர்களுக்கு பெரிய இழப்பு என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை வேறு இடத்தில் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.