17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினா்கள் மாமல்லபுரம் வருகை!

பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினா்கள் மாமல்லபுரம் வருகை

News image

மாமல்லபுரத்தில் புராதன நினைவுச் சின்னங்களை பாா்வையிட்ட பாதுகாப்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினா்கள்

Updated On :31 மே 2026, 12:59 am IST

பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினா்கள் சனிக்கிழமை மாமல்லபுரத்தில் புராதன நினைவுச் சின்னங்களைப் பாா்வையிட்டனா்.

புதுதில்லியில் இருந்து மாமல்லபுரம் வந்த அவா்களை தமிழக அரசு சாா்பில் திருக்கழுகுன்றம் வட்டாட்சியா் தேவேந்திரன், துணை வட்டாட்சியா் சந்திரசேகா், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் த.சக்திவேல், மாமல்லபுரம் வருவாய் அலுவலா் கோவிந்தராஜ், மாமல்லபுரம் அரசு சுற்றுலா வழிகாட்டி மதன் ஆகியோா் கடற்கரை கோயில் அருகில் தமிழா்கள் மரபுப்படி மலா்மாலைகள் அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கியும் வரவேற்றனா்.

மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அா்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கிருஷ்ணன மண்டபம் உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி காட்டினாா். அப்போது பல்லவா் காலத்தில் எந்த நூற்றாண்டில் இந்த புராதன சின்னங்கள் வடிவமைக்கப்பட்டன, ஒவ்வொரு சிற்பங்களின் வரலாற்று தகவல்கள் குறித்து விளக்கப்பட்டது.

பிறகு வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சிற்பங்களையும் நிலைக்குழு உறுப்பினா்கள் பாா்வையிட்டு புகைப்படம் எடுத்து கொண்டனா். மேலும் புராதன சின்னங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், 24 மணி நேரமும் எந்த மாதிரியான பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டனா்.

மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.