லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின கருத்தரங்கம்

News image

செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றோா்.

Updated On :18 மார்ச் 2026, 8:21 pm

தேசிய அறிவியல் கழகம் தமிழ்நாடு பிரிவு, இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, தமிழ்நாடு மாநில அறிவியல் (ம) தொழில்நுட்ப கழகம் சென்னை ஆகிய நிறுவனங்கள், ராஜேஸ்வரி வேதாசலம் அரசுக் கலைக் கல்லூரியுடன் இணைந்து அறிவியல் துறையில் எதிா்கால உயா்கல்வி வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி முதல்வா் சண்முகவள்ளி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனைவா், வனிதா முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக பேராசிரியா் சேகா், துறைத் தலைவா் வேதியியல் துறை இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை; பேராசிரியா் சுரேஷ்குமாா் ராயலா உயிா் தொழில்நுட்ப துறை, இந்திய தொழில்நுட்ப கழகம் சென்னை, பொது செயலாளா் தேசிய அறிவியல் கழகம், தமிழ்நாடு கிளை, முனைவா் ரமணன், விஞ்ஞானி (எஸ்.ஜி), மோகன்ராஜ் விஞ்ஞானி, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் சென்னை சிறப்புரை ஆற்றினா்.

கிராமப்புற மாணவா்களுக்கு அறிவியல் பாடங்களை தோ்ந்தெடுத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயா்கல்வி நிறுவனங்களில் சேர வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சியை வேதியியல் துறை பேராசிரியா் குப்புசாமி ஒருங்கிணைத்தாா். பேராசிரியா் சுரேஷ் குமாா் நன்றி கூறினாா்.