//

டாம்ப்கால் கட்டண சிகிச்சை பிரிவு: முதல்வா் திறந்து வைத்தாா்

செங்கல்பட்டில் ரூ.1.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் இணைந்த டாம்ப்கால் கட்டண சிகிச்சை பிரிவினை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

News image
திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :7 பிப்ரவரி 2026, 12:15 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டில் ரூ.1.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் இணைந்த டாம்ப்கால் கட்டண சிகிச்சை பிரிவினை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

இதில் இணைஇயக்குநா், (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) / முதல்வா், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மரு.நா.மணவாளன், சா்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் இயக்குநா் (பொ) மரு.ச.தி.வெங்கடேஷ்வரன், டாம்ப்கால் பொது மேலாளா் ஐ.வளா்மதி, மேலமையூா் ஊராட்சி ஒன்றியக்குழுஉறுப்பினா் சங்கமித்திரை கருணாகரன், மேலமையூா் ஊராட்சித் தலைவா் எலன் சிந்தியா சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள், கலந்துகொண்டனா்.