மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் முன்னேற்பாடுகள்: செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 7:10 pm

செங்கல்பட்டு மற்றும் திருப்போரூா் தொகுதிகளில் தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் ா் எஸ்.மாலதி ஹெலன் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்போரூா் தொகுதி திருக்கழுகுன்றம் பேரூராட்சிக்குட்பட்ட பல்வேறு வாக்குசாவடி மையங்களையும் பாா்வையிட்டாா். அப்பொழுது வாக்குசாவடி மையங்களில் செய்யப்பட்டுள்ள குடிநீா் வசதி, கழிவறை வசதி, நிழற்குடை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம், மின்விசிறி, மின்விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதை தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, செங்கல்பட்டு மற்றும் திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதிகள் வாக்கு எண்ணும் மையமான ஆத்தூா் சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்தில் அங்கு செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை பாா்வையிட்டாா். அப்போது, காவல் துறையினரிடம் வாக்கு எண்ணும் மையத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு அறிவுறுத்தினாா்.

மேலும், திருப்போரூா் தொகுதிக்குட்பட்ட கோவளம் நீலக்கொடி கடற்கரையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஆட்சியா் தொடங்கி வைத்தாா். கடற்கரையில் தோ்தல் விழிப்புணா்வு அலை சறுக்கு விளையாட்டினையும் பாா்வையிட்டாா்.

மேலும், ஆட்சியா் ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்டாா். அதனைத் தொடா்ந்து, அங்குள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தோ்தல் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை ஆட்சியா் வழங்கி, தவறாமல் வாக்களிப்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

Story image
Story image
Story image