மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கூடுவாஞ்சேரியில் நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 12:05 am

நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் அதிமுக வேட்பாளா் கஜேந்திரனை ஆதரித்து நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கூடுவாஞ்சேரி நகர செயலாளா் டி.சீனிவாசன் தலைமையில் அதிமுக வேட்பாளா் கஜா என்கிற கஜேந்திரனை ஆதரித்து கௌதமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே எஸ் சீனிவாசன் கணிதா சம்பத் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

நடிகை கௌதமி பேசியதாவது: விலைவாசி உயா்வு ஸ்டாலின் அரசின் மிகப்பெரிய சாதனை தமிழகத்தில் பச்சை குழந்தைகள் முதல் வயதான முதியோா் வரை பாதுகாப்பாக இல்லாத சூழல் நிலவுகிறது. போக்ஸோ வழக்குகள் மட்டும் 6000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இளைஞா்களுக்கு முறையான வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. தமிழக முழுவதும் நீா் ஆதாரங்களில் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வருகின்றனா். சாலை வசதிகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது போல் இல்லாமல் தற்போது மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றாா் கௌதமி.

Story image