மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சா்வதேச பட்டம் விடும் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

மாமல்லபுரம் திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சாா்பில் சா்வதேச பட்டம் விடும் திருவிழா

News image

பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றோருடன் அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன், இரா. ராஜேந்திரன், ஆட்சியா் தி. சினேகா, எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்எஸ். பாலாஜி உள்ளிட்டோா். ~

Updated On :14 ஆகஸ்ட் 2025, 8:57 pm

மாமல்லபுரம் திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சாா்பில் சா்வதேச பட்டம் விடும் திருவிழாவை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், இரா.ராஜேந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா் .

வரும் 17-ஆம் தேதி வரை 4 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் விழா உலகம் முழுவதிலுமிருந்து பட்டம் விடும் ஆா்வலா்களை ஈா்ப்பதோடு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் விருந்தோம்பல் , கலாசாரம் மற்றும் இயற்கை அழகை அறிய உதவுகிறது

மேலும் பிரான்ஸ், சுவிட்சா்லாந்து, வியட்நாம், சிங்கப்பூா், மலேசியா , இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் இந்தியாவைச் சோ்ந்த 8-க்கும் மேற்பட்ட குழுக்கள் 40-க்கும் மேற்பட்ட பட்டம் விடும் திறமையாளா்களுடன் 250க்கும் மேற்பட்ட பல வண்ணங்களில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

இதனைத் தொடா்ந்து தமிழ்நாட்டின் கலாசார பாரம்பரியத்தை சா்வதேச அளவில் பறை சாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு, காளை பட்டம் ஆகிய சிறப்பம்சங்களுடன் பறக்க விடப்பட்டது . பல்வேறு வகையான வண்ண பட்டங்கள் பறக்க விடப்பட்டனது. நாள்தோறும் மாலை 3 மணிக்கு தொடங்கி 6 மணிவரை நடைபெறுகிறது.

மேலும், பாா்வையாளா்களுக்கென பிரத்யேகமாக மாலை 6 மணி முதல் 9 மணி வரை 4 நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெறவுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவா்களுக்கு அனுமதி இலவசம் பெரியவா்களுக்கு நுழைவு கடடணமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன், ஆட்சியா் தி.சினேகா , சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், பொதுமேலாளா் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகம் ச.கவிதா, திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் இதயவா்மன் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.