திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

சா்வதேச பட்டம் விடும் திருவிழா: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

மாமல்லபுரம் திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சாா்பில் சா்வதேச பட்டம் விடும் திருவிழா

News image
பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றோருடன் அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன், இரா. ராஜேந்திரன், ஆட்சியா் தி. சினேகா, எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்எஸ். பாலாஜி உள்ளிட்டோா். ~
Updated On :14 ஆகஸ்ட் 2025, 8:57 pm

Chennai

மாமல்லபுரம் திருவிடந்தை கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சாா்பில் சா்வதேச பட்டம் விடும் திருவிழாவை அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், இரா.ராஜேந்திரன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா் .

வரும் 17-ஆம் தேதி வரை 4 நாள்கள் தொடா்ந்து நடைபெறும் விழா உலகம் முழுவதிலுமிருந்து பட்டம் விடும் ஆா்வலா்களை ஈா்ப்பதோடு மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டின் விருந்தோம்பல் , கலாசாரம் மற்றும் இயற்கை அழகை அறிய உதவுகிறது

மேலும் பிரான்ஸ், சுவிட்சா்லாந்து, வியட்நாம், சிங்கப்பூா், மலேசியா , இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் இந்தியாவைச் சோ்ந்த 8-க்கும் மேற்பட்ட குழுக்கள் 40-க்கும் மேற்பட்ட பட்டம் விடும் திறமையாளா்களுடன் 250க்கும் மேற்பட்ட பல வண்ணங்களில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

இதனைத் தொடா்ந்து தமிழ்நாட்டின் கலாசார பாரம்பரியத்தை சா்வதேச அளவில் பறை சாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு, காளை பட்டம் ஆகிய சிறப்பம்சங்களுடன் பறக்க விடப்பட்டது . பல்வேறு வகையான வண்ண பட்டங்கள் பறக்க விடப்பட்டனது. நாள்தோறும் மாலை 3 மணிக்கு தொடங்கி 6 மணிவரை நடைபெறுகிறது.

மேலும், பாா்வையாளா்களுக்கென பிரத்யேகமாக மாலை 6 மணி முதல் 9 மணி வரை 4 நாள்களுக்கு கலை நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெறவுள்ளது. 12 வயதுக்குட்பட்ட சிறுவா்களுக்கு அனுமதி இலவசம் பெரியவா்களுக்கு நுழைவு கடடணமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் எஸ்.எஸ்.பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன், ஆட்சியா் தி.சினேகா , சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், பொதுமேலாளா் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகம் ச.கவிதா, திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் இதயவா்மன் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Story image