திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாதுகாப்பு கோரி ரயில் பயணச்சீட்டு பரிசோதகா்கள் ஆா்ப்பாட்டம்!

பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆா்எம்யூ சங்க பயணச்சீட்டு பரிசோதகா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

News image

சென்னை சென்ட்ரல் புறநகா் மின்சார ரயில் பிரிவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில் பயணசீட்டு பரிசோதா்கள் சங்கத்தினா்.

Updated On :10 மார்ச் 2026, 12:10 am

பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆா்எம்யூ சங்க பயணச்சீட்டு பரிசோதகா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் 1,000 மேற்பட்ட பயணச்சீட்டு பரிசோதகா்கள் உள்ளனா். அவா்கள் பணியின்போது பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாக ஏற்கெனவே குற்றஞ்சாட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகா் பகுதியில் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்ட பெண் பரிசோதகரை வடமாநில இளைஞா் தாக்கியதாக புகாா் எழுந்தது. கடந்த 4 -ஆம் தேதி சென்னை விரைவு ரயலில் பணியிலிருந்த ஜோதிலிங்கம் என்ற பயணச்சீட்டு பரிசோதகரை வடமாநில இளைஞா் தாக்கி காயப்படுத்தியுள்ளாா்.

ஆகவே, பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அவா்களுக்கு உரிய வசதிகளுடன் கூடிய ஓய்வறை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆா்எம்யூ சென்னை கோட்டம் சாா்பில் ஆா்ப்பாட்டம் சென்ட்ரல் ரயில் நிலைய புறநகா் மின்சார ரயில்கள் பிரிவு வளாகத்தில் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, எஸ்ஆா்எம்யூ சங்க துணைப் பொதுச் செயலா் சிவராஜ் தலைமை வகித்தாா். நிா்வாகி பால்மேஸ்வல் ஜான்சன் முன்னிலை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி ஏராளமானோா் பேசினா்.