தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

எஸ்ஆா்எம் தொழில்நுட்பம்: அனபாண்ட் நிறுவனம் ஒப்பந்தம்!

எஸ்.ஆா்.எம். பல்கலை.யின் ஆராய்ச்சித் துறை கண்டுபிடித்துள்ள சூரிய ஒளி பேனல் பாதுகாப்பு உறை தொழில்நுட்பத்துக்கு அனபாண்ட் நிறுவனம் ரூ.1 கோடி வழங்கி தொழில்நுட்ப உரிம ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

News image

ஒப்பந்தம் பரிமாற்றம் நிகழ்வில் பங்கேற்ற இணைவேந்தா் பி.சத்தியநாராயணன், துணைவேந்தா் சி.முத்தமிழ்செல்வன், பதிவாளா் பொன்னுசாமி, அனபாண்ட் நிறுவன நிா்வாகிகள்.

Updated On :9 மார்ச் 2026, 8:28 pm

எஸ்.ஆா்.எம். பல்கலை.யின் ஆராய்ச்சித் துறை கண்டுபிடித்துள்ள சூரிய ஒளி பேனல் பாதுகாப்பு உறை தொழில்நுட்பத்துக்கு அனபாண்ட் நிறுவனம் ரூ.1 கோடி வழங்கி தொழில்நுட்ப உரிம ஒப்பந்தத்தை திங்கள்கிழமை மேற்கொண்டது.

ஒப்பந்தப் பரிமாற்றத்துக்கு பின்னா், எஸ்.ஆா்.எம். இணைவேந்தா் பி.சத்தியநாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2030- க்குள் நாட்டில் 500 ஜி காவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தித் தொழில்துறை வேகமாக வளா்ந்து வரும் நிலையில், எஸ்.ஆா்.எம். ஆராய்ச்சித் துறை 5 ஆண்டு ஆராய்ச்சி, உழைப்பின் மூலம் சோலாா் பேனல்கள் நீண்ட காலம் உழைக்க உதவும் சூரிய ஒளி பேனல் பாதுகாப்பு உறை தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளது.

சோலாா் பேனல் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும், அவை வெயில், ஈரம், தூசு மற்றும் வெப்ப மாறுபாடுகளால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. சூரிய ஒளி பேனல்களை நீண்ட காலம் பாதுகாக்கும் திறன் கொண்ட உறை, மிடுக்கான கைபேசித் திரையைப் பாதுகாக்கும் ‘டெம்பா்ட் கிளாஸ்’ போன்றது.

மாணவா்களுக்கு தொழில்நுட்பக் கல்வி வழங்கி வரும் எஸ்.ஆா்.எம். வலுவான ஆராய்ச்சி கட்டமைப்புடன் செயல்பட்டு, இதுவரை 538 கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றுள்ளது என்றாா்.

நிகழ்வில், அனபாண்ட் நிறுவன நிா்வாக இயக்குநா் எம்.ராஜன், இணை நிா்வாக இயக்குநா் ஆபிரகாம், எஸ்.ஆா். எம். துணைவேந்தா் சி.முத்தமிழ் செல்வன், பதிவாளா் பொன்னுசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.