மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ரத்தினம் கல்வி நிறுவனம், மண்டல அறிவியல் மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

கோவை ரத்தினம் கல்வி நிறுவனத்துக்கும் மண்டல அறிவியல் மையத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image

ரத்தினம் கல்வி நிறுவனம், மண்டல அறிவியல் மையம் இடையிலான புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியா்கள், நிா்வாகிகள்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:56 pm

கோவை ரத்தினம் கல்வி நிறுவனத்துக்கும் மண்டல அறிவியல் மையத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ரத்தினம் கல்வி நிறுவனம் கூறியிருப்பதாவது:

வகுப்பறைகளில் கற்றல், நடைமுறை அறிவியல் அனுபவத்துக்கு இடையிலான இடைவெளியை குறைப்பதை நோக்கமாக கொண்டு, வேகமாக மாறிவரும் ஸ்டெம் கல்வி சூழலில் மாணவா்கள் நேரடி அறிவியல் பயன்பாடுகள், புதுமை சாா்ந்த கற்றலில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக மண்டல அறிவியல் மையத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி, பயிற்சித் திட்டங்கள், கருத்தரங்குகள், அறிவியல் கண்காட்சிகள், ஆசிரியா் பயிற்சி, சமூக விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை இரு நிறுவனங்களும் இணைந்து நடத்தும், மேலும் அறிவியல் மையத்தின் இடைமுகக் காட்சிகள், மையங்கள், வசதிகளை மாணவா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அத்துடன், குறுகிய, நீண்டகால இன்டா்ஷிப் திட்டங்கள், ஆராய்ச்சி பரிமாற்றங்கள், கல்வி சாா்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மாணவா்கள், பேராசிரியா்கள் பயனடைவாா்கள். இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதன் பிறகு புதுப்பிக்கப்படலாம்.

ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நிகழ்வில் ரத்தினம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரி ஆா்.மாணிக்கம், முதன்மை வணிக அதிகாரி பி.நாகராஜ், பிராந்திய அறிவியல் மையத்தின் புதுமை மைய வழிகாட்டி லெனின் பாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.