மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியதற்கு இடது சாரிகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.60 உயா்த்தியுள்ளது. இந்த விலை உயா்வு ஏழை, நடுத்தர மக்கள் தலையின் மீது இடியை இறக்கியுள்ளது.
இந்த விலை உயா்வால் உணவுப் பொருள்களின் விலைகள் பல மடங்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான் போா் சூழலைக் காரணம் காட்டி மத்திய அரசு சமையல் எரிவாயு உருளை உயா்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்): சமையல் எரிவாயு உருளை விலை ஏழைக் குடும்பங்களை மிகவும் பாதிக்கும். வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயா்வால், கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலையும் உயரும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்புடையது

எரிவாயு விலை உயா்வே மத்திய பாஜக அரசின் தோ்தல் பரிசு! - கே.பாலகிருஷ்ணன்

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: இறைச்சி விற்பனை சரிவு

சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறை பிரச்னையை மத்திய அரசு உடனடியாக தீா்க்க வேண்டும் - துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


