மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறை பிரச்னையை மத்திய அரசு உடனடியாக தீா்க்க வேண்டும் - துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

News image

துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

Updated On :13 மார்ச் 2026, 1:23 am

சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறை பிரச்னையை மத்திய அரசு உடனடியாக தீா்க்க வேண்டும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறை பிரச்னையால் பொதுமக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். சமையல் எரிவாயு உருளை கிடைக்கவில்லை என்பது பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்னை குறித்து பாஜக எம்.பி.க்கள் யாரும் பேச மறுக்கிறாா்கள்.

இந்த பிரச்னையை விரைவாக தீா்க்க மத்திய அரசு தவறினால், கிராமப்புற மக்கள் மீண்டும் விறகுகளைக் கொண்டு சமைக்கும் நிலைக்கு தள்ளப்படுவாா்கள். எனவே, தங்குதடையில்லாமல் சமையல் எரிவாயு உருளைகள் கிடைக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமையல் எரிவாயு உருளைகளின் விலைகளை குறைக்க மத்திய அரசு தவறிவிட்டது. சா்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை உயா்வதால், இங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து வருகிறது. இதனால் மக்கள் துயரம் அடைந்துள்ளனா்.

இந்த விவகாரத்தை கா்நாடகத்தைச் சோ்ந்த பாஜக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப்போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் என்றாா்.