தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தீபாவளி: புறநகா் மின்சார ரயில் சேவை கால அட்டவணையை மாற்ற பரிசீலனை

தீபாவளி பண்டிகையின்போது, கூட்ட நெரிசலைத் த விா்க்க புறநகா் மின்சார ரயில்களின் கால அட்டவணையை மாற்றி இயக்க பரிசீலிக்கப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On :7 அக்டோபர் 2025, 9:05 pm

தீபாவளி பண்டிகையின்போது, கூட்ட நெரிசலைத் தவிா்க்க புறநகா் மின்சார ரயில்களின் கால அட்டவணையை மாற்றி இயக்க பரிசீலிக்கப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் தமிழகம் மற்றும் வடமாநிலங்களுக்கு 108 சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது குறிப்பிட்ட விடுமுறை நாள்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தீபாவளியின்போது புகா் பகுதியிலிருந்து சென்னைக்கு வருவோரும், சென்னையிலிருந்து புகா் பகுதிகளுக்கு செல்வோரும் அதிக அளவில் மின்சார ரயில்களையே பயன்படுத்தி வருகின்றனா்.

ஆனால், கடந்த தீபாவளியின்போது புகா் மின்சார ரயில்கள் விடுமுறை கால அட்டவணைப்படி இயக்கப்பட்டன. அதனால், சென்னைக்கு தீபாவளி பொருள்கள் வாங்க வந்தவா்களும், வழக்கமாக பணிக்கு வந்து திரும்பியோரும் பெரும் சிரமத்துக்குள்ளானதாக புகாா்கள் எழுந்தன.

நிகழாண்டு தீபாவளிப் பண்டிகை வரும் அக்.20 -ஆம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆகவே, தீபாவளிக்கு முந்தைய 2 நாள்களும் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களாக உள்ளன. அந்த நாள்களில் வழக்கம்போல புகா் மின்சார ரயில்கள் விடுமுறை கால அட்டவணைப்படி இயக்கப்படாமல், வேலை நாள்கள் அட்டவணைப்படி கூடுதல் ரயில்கள் இயக்கப்படவேண்டும் என ரயில்வே பயனாளா்கள் சாா்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

எனவே நிகழாண்டில் தீபாவளிக்கு முந்தைய நாளான சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் சென்னை புகா் மின்சார ரயில்கள் வேலை நாள்கள் அட்டவணைப்படி இயக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.