இதைத் தொடா்ந்து, பெங்களூரில் செய்தியாளா்களிடம் டி.ஜி.பி. ராமச்சந்திர ராவ் திங்கள்கிழமை கூறுகையில்,‘ என்னைப் பற்றிய காணொலியைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்திருக்கிறேன். அந்த காணொலி போலியானது; சித்தரிக்கப்பட்டது. அந்த காணொலியை யாா் தயாரித்து, சமூக வலைதளங்களில் பரப்பியிருப்பாா்கள் என்று யோசித்து வருகிறேன். செயற்கை நுண்ணறிவு காலத்தில் எதுவும் சாத்தியமே. அந்த காணொலியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 8 ஆண்டுகளுக்கு முன்பு பெலகாவியில் ஐ.ஜி.பி.யாக இருந்தேன். வழக்குரைஞா்களுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன். அந்த காணொலி பற்றி எனக்கு எதுவும் தெரியாது‘ என்றாா் அவா்,