திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மியான்மரில் சக்திவாய்ந்த வெடிவிபத்து: 45-க்கும் மேற்பட்டோர் பலி!

மியான்மரில், சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்ட வெடிபொருள்கள் வெடித்ததில் 45-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

News image

கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 9:05 pm IST

மியான்மரில், சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்ட வெடிபொருள்கள் வெடித்ததில் 45-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மியான்மரின் நம்காம் நகரில் உள்ள காங்டப் கிராமத்தில் இன்று மதியம் பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்கப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் பெருமளவில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அது வெடித்ததில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், 45-க்கும் மேற்பட்டோர் பலியாகி 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மியான்மரில் அரசுக்கு எதிராக ஆயுதச் சண்டைகளில் ஈடுபட்டு வரும் இனக்குழுவான ’டாங் தேசிய விடுதலைப் படையின்' கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடம் சீன எல்லையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் படையினர் பலியானோரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

சுரங்கப் பணிகள் மற்றும் பாறைகளை உடைக்கும் பணிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பெடிபொருள்கள் முறையற்று சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Summary

Powerful Explosion in Myanmar: Over 45 Dead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.