தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியா - அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் எப்போது? அமெரிக்க தூதா் தகவல்

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் கையொப்பமாகக்கூடும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்துள்ளாா்.

News image

சொ்ஜியோ கோா்

Updated On :30 மே 2026, 5:00 am IST

இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் அடுத்த சில வாரங்களில் கையொப்பமாகக்கூடும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவும், அமெரிக்காவும் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் செய்வது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இந்த ஒப்பந்த ஷரத்துகள், இந்திய நலன்களுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு சாதமாகவும் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் கோா், இந்த ஒப்பந்தம் குறித்து தெரிவித்தாா். அப்போது அவா், இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடப்பதாகவும், அந்த ஒப்பந்தம் அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில் கையொப்பமாகக்கூடும் என்றும் குறிப்பிட்டாா்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ அண்மையில் இந்தியாவில் மேற்கொண்ட பயணம் பயனுள்ளதாக இருந்தது எனறு கோா் தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறுகையில், ‘பெருகிவரும் வாய்ப்புகளைக் கைப்பற்ற இந்தியா, அமெரிக்கா நட்புறவுக்கு அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகளைக் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது. ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தொடா்பான கொள்கைகளை அமெரிக்கா சரிசெய்து வருகிறது. இது இந்தியா- அமெரிக்கா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தக்கூடும். இந்தியாவின் திறனை அமெரிக்கா புரிந்து வைத்துள்ளது. இந்த நட்புறவை பொருளாதார கூட்டணியாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறும் உள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.