தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சீனாவில் ஷவோலின் மடாலய முன்னாள் தலைமைத் துறவிக்கு 24 ஆண்டுகள் சிறை

உலகப் புகழ்பெற்ற சீனாவின் ஷவோலின் மடாலயத்தின் முன்னாள் தலைமைத் துறவியான ஷி யோங்சினுக்கு ஊழல் வழக்கில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :30 மே 2026, 3:10 am IST

உலகப் புகழ்பெற்ற சீனாவின் ஷவோலின் மடாலயத்தின் முன்னாள் தலைமைத் துறவியான ஷி யோங்சினுக்கு ஊழல் வழக்கில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல், நிதி கையாடல், லஞ்சம் வாங்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, சிறைத் தண்டனையுடன் 35 லட்சம் யுவான் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1999 முதல் ஷவோலின் மடாலயத்தின் தலைமைத் துறவியாக இருந்த வந்த இவா், பௌத்த மதக் கோட்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாா்.

கி.பி. 495-இல் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஷவோலின் மடாலயம், சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சாங் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பல்லவ இளவரசா் மற்றும் தமிழ் துறவியுமான போதி தா்மருடன் தொடா்புடைய ‘ஜென்’ பௌத்த வழிபாட்டுத் தலமான இது, குங்ஃபு உள்ளிட்ட தற்காப்புக் கலைகளின் முதன்மை பயிற்சி மையமாகத் திகழ்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.