திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமெரிக்காவுடன் போர்நிறுத்தத்துக்கு ஈரான் ஒப்புக்கொண்டதா?

யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுப்பதன் மூலம் அமெரிக்காவுடன் போர்நிறுத்தத்துக்கு ஈரான் ஒப்புக்கொண்டதாகத் தகவல்

News image

ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தம் - AFP

Updated On :24 மே 2026, 9:30 am IST

யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தியது. இதனிடையே, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால், எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஈரானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வந்தது. இருப்பினும், ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் முன்மொழிவுகள் ஏற்கக்கூடியதாக இல்லை எனக்கூறி, அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் மறுத்தது.

குறிப்பாக, அமெரிக்காவின் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய முன்மொழிவான யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் மறுத்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் ஒத்துழைக்காவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இதனிடையே, இவ்விரு நாடுகளுக்கிடையேயும் மத்தியஸ்தம் செய்வதில் பாகிஸ்தான் தீவிரமாக ஈடுபட்டது.

இந்த நிலையில், யுரேனியம் செறிவூட்டலை விட்டுக்கொடுக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இரு நாடுகளும் விரைவில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Has Iran agreed to a ceasefire with the US?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.