திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

லெபனானுடன் போர்நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

News image

லெபனானில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்ட ஒரு கட்டிடங்கள். - AP

Updated On :9 மே 2026, 10:48 pm IST

லெபனானுடன் போர்நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இதனால், தெற்கு லெபனானில் உள்ள 9 கிராமங்களில் வசிக்கும் மக்களை இன்று (மே 9) உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

"பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதால், இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதற்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது" என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் 9 கிராமங்களைப் பட்டியலிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

அவரின் பதிவில், "உங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக உங்கள் வீடுகளை விட்டு வெளியேறுங்கள். கிராமங்கள் மற்றும் நகரங்களிலிருந்து வெளியேறி திறந்தவெளிப் பகுதிகளுக்குக் குறைந்தது 1,000 மீட்டர் தூரத்தில் விலகி இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் முதலே போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் நிலையில், இஸ்ரேல் படைகளும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பும் தெற்கு லெபனானில் நாள்தோறும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் 85-க்கும் மேற்பட்ட தளங்கள் மீது வான்வழி, தரைவழி தாக்குதல்கள் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியிருந்தது.

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் காரணமாக அவர்கள் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா இரு நாள்களுக்கு முன் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சமீபத்தில் 11 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தெரிவித்திருந்தது.

Summary

Israel army issues evacuation warning for nine south Lebanon villages

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.