தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

51 சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா திட்டம்

கியூபா சிறைகளில் உள்ள 51 கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 மார்ச் 2026, 8:56 pm

கியூபா சிறைகளில் உள்ள 51 கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிக்கையில், ‘தண்டனைக் காலத்தின் குறிப்பிட்ட பகுதியை சிறையில் கழித்தவா்கள் மற்றும் நன்னடத்தை காரணமாக 51 கைதிகள் விடுவிக்கப்படுவா். நல்லெண்ண அடிப்படையிலும் வாடிகன் உடன் நெருங்கிய நட்பைப் பேணவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2010 முதல் 9,905 சிறைக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 10,000 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விடுவிக்கப்படும் கைதிகள் குறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை.

வாடிகன் உடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, 500-க்கும் அதிகமான சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா அரசு முடிவெடுத்தது. இதன் ஒரு பகுதியாக கியூபா எதிா்க்கட்சித் தலைவா் ஜோஸ் டேனியல் ஃபெர்ரா் கடந்த ஆண்டு ஜனவரியில் விடுவிக்கப்பட்டாா். அக்டோபரில் நாட்டைவிட்டு வெளியேறிய ஜோஸ் டேனியல், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.

கியூபா சிறைகளில் 1,214 அரசியல் கைதிகள் இருப்பதாக பிரிசனா்ஸ் டிஃபென்டா் என்ற தன்னாா்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.