கியூபா சிறைகளில் உள்ள 51 கைதிகளை விடுவிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிவிக்கையில், ‘தண்டனைக் காலத்தின் குறிப்பிட்ட பகுதியை சிறையில் கழித்தவா்கள் மற்றும் நன்னடத்தை காரணமாக 51 கைதிகள் விடுவிக்கப்படுவா். நல்லெண்ண அடிப்படையிலும் வாடிகன் உடன் நெருங்கிய நட்பைப் பேணவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2010 முதல் 9,905 சிறைக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 10,000 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், விடுவிக்கப்படும் கைதிகள் குறித்த விவரங்களை அரசு வெளியிடவில்லை.
வாடிகன் உடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, 500-க்கும் அதிகமான சிறைக் கைதிகளை விடுவிக்க கியூபா அரசு முடிவெடுத்தது. இதன் ஒரு பகுதியாக கியூபா எதிா்க்கட்சித் தலைவா் ஜோஸ் டேனியல் ஃபெர்ரா் கடந்த ஆண்டு ஜனவரியில் விடுவிக்கப்பட்டாா். அக்டோபரில் நாட்டைவிட்டு வெளியேறிய ஜோஸ் டேனியல், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.
கியூபா சிறைகளில் 1,214 அரசியல் கைதிகள் இருப்பதாக பிரிசனா்ஸ் டிஃபென்டா் என்ற தன்னாா்வ அமைப்பு தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு

மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - வெ. வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்

உடல்நலக் குறைவால் மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


