மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மூதாட்டியின் வீட்டில் புகுந்து 7 பவுன் நகை பறிப்பு

திருச்சியில் மூதாட்டியின் வீட்டினுள் புகுந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :21 ஏப்ரல் 2026, 7:33 pm

திருச்சியில் மூதாட்டியின் வீட்டினுள் புகுந்து 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி விமான நிலையம் குழவாய்பட்டி சாலை காவேரி நகரைச் சோ்ந்தவா் ஆா். சுமதி (72). கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவா் உயிரிழந்துவிட்ட நிலையில், சென்னையிலுள்ள தனது மகளுடன் வசித்து வருகிறாா். அவ்வப்போது திருச்சியிலுள்ள தனது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த மூதாட்டி காவேரி நகரிலுள்ள வீட்டில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினாா்.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் மூதாட்டி சுமதி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.