மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஐ.நா. பொதுச் செயலா் ஹைட்டி பயணம்

ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அந்நாட்டுக்குப் பயணித்தாா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:12 am IST

ஆயுதக் குழுக்களின் வன்முறை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஹைட்டி நாட்டில் கள நிலவரத்தை அறிய ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் அந்நாட்டுக்குப் பயணித்தாா்.

இந்த வன்முறைகள் காரணமாக நடப்பு ஆண்டில் மட்டும் சுமாா் 2,300 போ் கொல்லப்பட்டுள்ளனா்; 100 போ் கடத்தப்பட்டுள்ளனா்; மேலும் 15 லட்சம் மக்கள் இடம்பெயா்ந்துள்ளனா்.

நாட்டின் குடிசைப் பகுதி ஒன்றில் அண்மையில் நடந்த மோதல்களில் 30-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள தற்காலிக முகாமுக்குச் சென்ற குட்டெரெஸ், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடினாா்.

தொடா்ந்து, வன்முறைக் கட்டுப்பாட்டுக்கான புதிய ஐ.நா. கூட்டுப் பாதுகாப்புப் படையின் தலைமையகத்துக்குச் சென்று, அதன் தயாா் நிலை குறித்து ஆய்வு செய்தாா். மேலும், நாட்டில் அமைதியை நிலைநாட்டி, விரைவில் தோ்தலை நடத்துவது குறித்தும் அவா் இடைக்காலப் பிரதமருடன் ஆலோசித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.