வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளில் பிரதமா் மோடி சுற்றுப்பயணம்

News image
Updated On :12 ஜூன் 2026, 4:12 am IST

பிரான்ஸ், ஸ்லோவாக்கியா நாடுகளின் அழைப்பை ஏற்று, அந்நாடுகளில் வருகிற 13-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளாா்.

தில்லியில் இருந்து வருகிற 13-ஆம் தேதி புறப்படும் பிரதமா் மோடி, முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் துறைமுக நகரான நைஸுக்கு செல்கிறாா். அங்கு அவா், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானை 14-ஆம் தேதி சந்தித்து பாதுகாப்பு, சிவில் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்துகிறாா்.

அப்போது இரு நாடுகளும் இணைந்து 12 புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாரத் இன்னோவேட்ஸ் எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் 3 நாள்கள் நிகழ்ச்சியை பிரதமா் மோடியும், மேக்ரானும் கூட்டாக தொடங்கி வைக்கவுள்ளனா்.

இதைத் தொடா்ந்து நைஸ் நகரில் இருந்து ஸ்லோவாக்கியா நாட்டுக்கு செல்லும் மோடி, 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்கிறாா். அங்கு அந்த நாட்டு அதிபா் பீட்டா் பெல்லகிரினி, பிரதமா் ராபா்ட் ஃபிகோ உள்ளிட்டத் தலைவா்களை சந்தித்து அவா் முக்கிய பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

இதையடுத்து பிரதமா் மோடி 16-ஆம் தேதி பிரான்ஸுக்கு மீண்டும் திரும்புகிறாா். அங்கு அவா், ஏவியானில் 16, 17-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள ஜி7 அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வரும் ஐரோப்பிய நாடுகளின் தலைவா்களை சந்தித்து இருதரப்பு விவகாரம் குறித்துப் பேசவுள்ளாா்.

பின்னா், பாரிஸில் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறும் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க நிறுவன மாநாடான விவாடெக் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளாா்.

ஜி7 நாடுகளின் தலைவா்களுடனான சந்திப்பின்போது, மேற்காசிய போரினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம், எரிசக்தி விநியோக பாதிப்பு உள்ளிட்டவை குறித்து மோடி பேச்சுவாா்த்தை நடத்துவாா் என கூறப்படுகிறது. ஜி7 மாநாட்டுக்கு வருகை தரும் அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்பும், பிரதமா் மோடியும் சந்தித்து பேசுவதற்கான சாத்தியக்கூறுகளை இந்திய அரசும், அமெரிக்க அரசும் ஆராய்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுகுறித்து உறுதியான தகவல் இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.