ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் மீது உக்ரைன் நடத்திய பெரியளவிலான டிரோன் தாக்குதல்களால் வீடுகளில் உள்ள மக்களை வெளியே வரவேண்டாம் என ரஷியா எச்சரித்துள்ளது.
மேலும், இணைய வசதி துண்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பீட்டர்ஸ்பர்க் நகரில் 141 டிரோன்கள் இதுவரை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 376 உக்ரைனின் டிரோன்கள் தாக்கி அழிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
4 ஆண்டுகளாக மோதல் தொடர்ந்து வரும் நிலையில் அதுதொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷியாவுக்கு உக்ரைன் அழைப்பு விடுத்திருந்தது. ரஷியப் படைகள் 2022-ல் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து புதினுக்கு முதல்முறையாக நேரடி கடிதம் எழுதிய ஸெலென்ஸ்கி, ரஷிய அதிபரின் 26 ஆண்டுகால ஆட்சியப் பற்றி கடுமையான விமர்சனங்களையும், அவரது வயதைக் கிண்டலடித்தும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
அந்த அழைப்பு கடிதத்தை புதின் நேற்று (ஜூன் 6 ) நிராகரித்ததைத் தொடர்ந்து உக்ரைன் இன்று தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உக்ரைன் - ரஷியா இடையே நடைபெறும் மோதல் ரஷியாவின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கவில்லை என்று இதுவரை வெளியுலகிற்கு காட்டப்பட்ட நிலையில், தற்போது பீட்டர்ஸ்பர்க் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் ரஷிய அதிபர் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
உக்ரைன் நடத்திய தாக்குதல் காரணமாக பலியானோர் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
புதின் ஆண்டுதோறும் நடத்தும் முதலீட்டாளர்கள் கண்காட்சியான ‘சர்வதேச பொருளாதார மன்றம்’ பீட்டர்ஸ்பர்க் நகரில் தொடங்குவதற்கு சில மணி நேரம் முன்பு அந்நகரின் எண்ணெய் முனையம் ஒன்றின் மீதும் கப்பல் தளம் மீதும் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்தே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் 272 டிரோன்களில் 249 -ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் இன்று தெரிவித்துள்ளது.
Summary
Ukraine has carried out drone attacks on the Russian city of St. Petersburg.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ விபத்து!
ரஷியாவில் 800 கி.மீ. தொலைதூர இலக்கை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

உக்ரைன் டிரோன் தாக்குதலில் இந்தியர் பலி!

நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



