ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவு பற்றி....

Landslide in China's Chongqing city kills 8, leaves 34 missing

சீனாவில் நிலச்சரிவு.

Published On :17 ஜூலை 2026, 9:35 pm IST

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 8 பேர் பலியான நிலையில் 34 பேரைக் காணவில்லை.

தென்மேற்கு சீன நகரமான சோஃக்கிங்கில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, பெருமளவிலான பாறைகளும் மண்ணும் அடித்து வரப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்களைப் புதைத்ததாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குடியிருப்பு கட்டடங்கள் புதைந்ததால், 1,100-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். நிலச்சரிவைத் தொடர்ந்து சுமார் 1 கி.மீ சுற்றளவில் உள்ள பகுதிகளில் தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயு விநியோகமும் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் 800-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

நிலச்சரிவில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இதுவரை 8 பேர் பலியாகினர். மேலும் 34 பேரைக் காணவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகில் பல கட்டடங்கள் அமைந்திருந்தன. சுமார் ஐந்து மற்றும் 15 அடுக்கு மாடிகள் கொண்ட இரண்டு அடுக்குமாடி கட்டடங்கள் சேதமடைந்தன.

8,000-க்கும் மேற்பட்ட பேரிடர் நிவாரணப் பொருட்களை சோஃக்கிங் பகுதிக்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மழையினால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவானது உஜியாங் ஆற்றின் ஒரு பகுதியின் அருகே நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

A landslide Friday in the southwestern Chinese city of Chongqing killed eight people and left 34 missing, burying residential buildings and forcing more than 1,100 people to evacuate, state media reported.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.