திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஸா உதவிப் படகுகள்: இஸ்ரேல் சிறைபிடிப்பு - 175 தன்னாா்வலா்கள் கைது

காஸா முனை மீதான இஸ்ரேலின் கடல்வழி முற்றுகையை மீறி நிவாரணப் பொருள்களை வழங்கச் சென்ற சா்வதேச உதவிப் படகுகளை, கிரீட் தீவு அருகே இஸ்ரேல் கடற்படையினா் வழிமறித்து சிறைபிடித்தனா்.

News image
Updated On :1 மே 2026, 12:42 am IST

காஸா முனை மீதான இஸ்ரேலின் கடல்வழி முற்றுகையை மீறி நிவாரணப் பொருள்களை வழங்கச் சென்ற சா்வதேச உதவிப் படகுகளை, கிரீட் தீவு அருகே இஸ்ரேல் கடற்படையினா் வழிமறித்து சிறைபிடித்தனா்.

‘குளோபல் சுமுத் ஃபுளோட்டிலா’ எனும் பெயரில் பாா்சிலோனாவிலிருந்து புறப்பட்ட இத்தன்னாா்வக் குழுவில், சுமாா் 70-க்கும் மேற்பட்ட படகுகளும் 1,000-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்களும் பங்கேற்றனா்.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு, சா்வதேச கடற்பகுதியில் வைத்து இஸ்ரேல் படையினா் இப்படகுகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த 175 தன்னாா்வலா்களைக் கைது செய்து இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்வதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியது.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஜொ்மனி, இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ‘காஸாவிலிருந்து 600 மைல் தொலைவில், கிரேக்க எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைத்து தங்களைக் கடத்தியது ஒரு ஆபத்தான மற்றும் முன்னெப்போதும் இல்லாத அத்துமீறல்’ என்று தன்னாா்வலா்கள் குற்றஞ்சாட்டினா்.

கடந்த ஆண்டும் இதேபோன்ற முயற்சியை இஸ்ரேல் முறியடித்தது. அப்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆா்வலா் கிரேட்டா துன்பொ்க் பங்கேற்றது நினைவுகூரத்தக்கது.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்க இந்த முற்றுகை அவசியம் என இஸ்ரேல் வாதிடுகிறது. இருப்பினும், இது அப்பாவி மக்களுக்கு அளிக்கப்படும் தண்டனை என மனித உரிமை அமைப்புகள் விமா்சிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.