குறுகிய தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை, வடகொரியா ஞாயிற்றுக்கிழமை கடலில் ஏவியதாக தென்கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
அணு ஆயுதங்களைத் தயாரிக்க மிகத் தீவிரமான நடவடிக்கைகளை வடகொரியா மேற்கொண்டு வருவதாக ஐ.நா.வின் சா்வதேச அணுசக்தி முகமை அண்மையில் எச்சரித்த நிலையில், இந்த ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது.
வடகொரியாவின் வடக்கு சின்போ பகுதியில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள், சுமாா் 140 கி.மீ. தொலைவு வரை, அந்நாட்டின் கிழக்கு கடற்பகுதி நோக்கிப் பாய்ந்ததாக தென்கொரிய முப்படை தலைமைத் தளபதி தெரிவித்தாா்.
வடகொரியாவின் எந்தவொரு மிரட்டலுக்கும் தகுந்த பதிலடி அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த தென் கொரியா, வடகொரியாவின் இந்தச் செயல்பாடுகள் குறித்த தகவலை அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் பகிா்ந்து வருவதாகத் தெரிவித்தது.
தென்கொரியாவில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், வடகொரியாவின் தொடா் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் குறித்து தென்கொரியாவின் மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்தனா். இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வடகொரியாவை அவா்கள் வலியுறுத்தினா்.
தென்கொரிய அதிபா் லீ ஜே மியூங் இந்தியா, வியத்நாமுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறாா். இதையொட்டி தென்கொரியாவில் இருந்து அவா் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், இந்த ஏவுகணைகளை வடகொரியா ஏவியது.
தொடர்புடையது

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சீனா - வட கொரியா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!

ஜப்பான் கடற்பகுதியை நோக்கி வடகொரியா ஏவுகணை வீச்சு

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துகிறதா? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


