திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாட மறுத்த லெபனான் அதிபர்!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உரையாட மறுத்தது குறித்து...

News image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - லெபனான் அதிபர் அவுன்... - AP

Updated On :16 ஏப்ரல் 2026, 9:05 pm IST

லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உரையாட மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக அந்நாட்டின் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில், தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவிய இஸ்ரேலிய படைகள் குடியிருப்புப் பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப். 14) அன்று தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உடன் இன்று லெபனான் அதிபர் அவுன் செல்போன் வாயிலாக உரையாடியதாகவும்; அப்போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாடுவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களால், லெபனான் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் இந்தச் சூழலில், நெதன்யாகுவுடன் உரையாடுவது ஏற்புடையதாக இருக்காது என்பதால் அதிபர் அவுன் மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளின் தலைவர்களிடையே நேரடியாகப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வது குறித்து இதுவரையில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

முன்னதாக, லெபனான் மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 260 பெண்கள் மற்றும் 172 குழந்தைகள் உள்பட 2,196 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Lebanese President Joseph Aoun has refused to hold talks with Israeli PM Netanyahu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.