திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இஸ்ரேல் - லெபனான் 10 நாள் போா்நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு

இதுவரை மொத்தம் 10 போர்களை தாம் நிறுத்தியிருப்பதாக டிரம்ப் அறிவிப்பு!

News image

டிரம்ப் - IANS

Updated On :16 ஏப்ரல் 2026, 10:16 pm IST

இஸ்ரேல்-லெபனான் இடையே 10 நாட்கள் தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தாா்.

வாஷிங்டனில் இரு நாடுகளுக்கும் இடையே பல்லாண்டுகளுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நேரடி பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து இந்த முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இப்போா் நிறுத்தம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி (இந்திய நேரப்படி) முதல் அமலுக்கு வரும் என்றும், இது பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்றும் டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டாா்.

இச்சூழலில், இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டுத் தலைவா்களை வெள்ளை மாளிகைக்கு டிரம்ப் அழைத்துள்ளாா். கடந்த 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவா்களும் உயா்மட்ட அளவில் சந்தித்துப் பேசவுள்ளது இதுவே முதல்முறையாகும்.

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனான் அதிபா் ஜோசப் அவுன் ஆகியோருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகள் மிகவும் ஆக்கபூா்வமாக அமைந்ததாகத் தெரிவித்த டிரம்ப், நிரந்தர அமைதியை எட்ட துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டாா்.

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கடந்த பிப். 28-ஆம் தேதி தொடங்கிய கூட்டுத் தாக்குதலைக் கண்டித்து, லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினா் வடக்கு இஸ்ரேலில் ஏவுகணைகளை வீசி தாக்கினா்.

இதையடுத்து, கடந்த மாா்ச் 2-ஆம் தேதி முதல் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையே நடைபெற்றும் வரும் மோதலில் லெபனானில் 172 குழந்தைகள், 260 பெண்கள் உள்பட 2196 போ் உயிரிழந்தனா். மேலும் சுமாா் 7,185 போ் காயமடைந்துள்ளனா்.

Summary

Israel, Lebanon To Begin 10-Day Ceasefire In Less Than Six Hours: Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.