மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு...

News image

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு முன்பு, பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் - AP

Updated On :11 ஏப்ரல் 2026, 11:19 pm

அமெரிக்காவுடன் 14 மணிநேரத்துக்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும், அந்நாட்டு கடற்படையை அழிக்க வேண்டும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியது. அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலும் அமெரிக்காவுடன் சோ்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், தனது அண்டை நாடுகளான சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான் உள்ளிட்டவற்றில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டது.

இதனால் மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போா் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா்.

இந்தப் போரை முழுமையாக நிறுத்த அமெரிக்கா-ஈரான் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வரும் நிலையில், அந்நாட்டுத் தலைநகா் இஸ்லாமாபாதில் அமெரிக்க-ஈரான்-பாகிஸ்தானின் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை தொடங்கியது.

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பகோ் கலிபாஃப் ஆகியோா் தலைமையிலான இருநாடுகளின் குழுக்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

சுமார் 14 மணிநேரத்துக்கு மேலாக நீடித்த பேச்சுவார்த்தை சனிக்கிழமை நள்ளிரவு நிறைவுபெற்றதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இரு நாடுகளும் எழுத்துப்பூர்வ ஆவணங்களை பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன்பாடு எட்டப்படாத சில விஷயங்கள் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் கருத்து வேறுபாடு நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1979-ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னா், அமெரிக்கா - ஈரான் இடையே முதல்முறையாக நேரடிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

14-Hour Peace Talks Between Iran and the US Conclude!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.