தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அமைதி முயற்சி: ரஷியா செல்லும் டிரம்ப் தூதா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் அடுத்த வாரம் தங்கள் நாட்டுக்கு வரவிருப்பதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

ஸ்டீவ் விட்காஃப்

Updated On :26 நவம்பர் 2025, 8:37 pm

கீவ்: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் வேகமெடுத்துவரும் நிலையில், இது தொடா்பாக விவாதிக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் அடுத்த வாரம் தங்கள் நாட்டுக்கு வரவிருப்பதாக ரஷிய அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் வெளியுறவு ஆலோசகா் யூரி உஷாகோவ் கூறியதாவது:

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பாக உருவாக்கப்பட்டுவரும் செயல்திட்டம் குறித்து ஆலோசனை நடத்த டிரம்ப்பின் சிறப்புத் தூதா் விட்காஃப் அடுத்த வாரம் மாஸ்கோ வருகிறாா். அமெரிக்காவின் ஆரம்பகட்ட அமைதித் திட்ட வரைவை ரஷிய அதிகாரிகள் இன்னும் அதிகாரபூா்வமாகப் பெறவில்லை. இருந்தாலும், வேறு சில வழிகள் மூலம் பெற்ற அந்த வரைவு திட்டத்தின் நகலை ரஷிய அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனா் என்றாா் உஷாகோவ்.

அமெரிக்க ராணுவத் துறை அமைச்சா் டான் டிரிஸ்கால் இந்த அமைதி முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்துவருகிறாா். விரைவில் அவா் உக்ரைன் தலைநகா் கீவுக்குச் செல்வாா் என்று அதிபா் டிரம்ப் செவ்வாய்க்கிழமை கூறினாா். ஆனால் இதை உக்ரைன் அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.