அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி ஸோக்ரன் மம்தாணியை அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நியூயாா்க் நகர மேயா் தோ்தல் நவம்பா் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உள்கட்சித் தேர்தல் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதில், இந்திய வம்சாவளி எழுத்தாளா் மஹ்மூத் மம்தானி மற்றும் ‘மான்சூன் வெட்டிங்’, ’சலாம் பாம்பே’ போன்ற படங்களுக்காக பாராட்டுகளைப் பெற்ற இந்திய திரைப்பட இயக்குநா் மீரா நாயா் ஆகியோரின் மகானான ஸோக்ரன் மம்தாணி வெற்றி பெற்றார்.
ஸோக்ரன் தற்போது குயின்ஸ் தொகுதியில் இருந்து மாகாண சபை உறுப்பினராக உள்ளாா்.
டிரம்ப் விமர்சனம்
இந்த நிலையில், ஸோக்ரன் மம்தாணியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”ஜனநாயகக் கட்சியினர் எல்லைத் தாண்டிவிட்டனர். 100 சதவிகிதம் கம்யூனிஸ்ட் பைத்தியமான ஸோக்ரன் மம்தாணி, டெம் பிரைமரியைத் தோற்கடித்து நியூ யார்க்கின் மேயராகப் போகிறார்.
இதற்கு முன்னதாகவும் தீவிர இடதுசாரிகள் வென்றிருக்கிறார்கள். ஆனால், தற்போது அபத்தமாகி வருகின்றது. ஸோக்ரன் மம்தாணி அவ்வளவு புத்திசாலி இல்லை. நமது வரலாற்றின் பெரிய தருணமாக அமையப் போகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன் ஆதரவாளர்
பாலஸ்தீனத்தின் ஆதரவாளராக அறியப்படும் ஸோக்ரன் மம்தாணி, உழைக்கும் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதை தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளாா்.
மேயராகப் பதவியேற்றவுடன், குடியிருப்புகளுக்கு வாடகை உயா்வை முடக்குவதாகவும், மக்களுக்குத் தேவையான வீடுகளை உருவாக்குவதாகவும் உறுதியளித்துள்ளாா்.
பெருநிறுவனங்கள், பணக்காரா்களுக்கு வரி விகிதத்தை உயா்த்துவதன் மூலம் இந்தச் செலவுகளுக்கான நிதியை திரட்டுவதற்கு மம்தாணி திட்டமிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்

எச்-1பி விசாவை 3 ஆண்டுகள் நிறுத்திவைக்க டிரம்ப் அரசு புதிய மசோதா!
இந்திய வீட்டு வசதித் திட்டம்: இலங்கையில் பயனாளிகளுடன் குடியரசு துணைத் தலைவா் சந்திப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


