தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நெருக்கடியை மீறி இம்ரான் கட்சி பேரணி

போலீஸாரின் கடும் நெருக்கடிக்கு இடையிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி லாகூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

லாகூா் புறநகா் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிடிஐ கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கான் ஆதரவாளா்கள்.

Updated On :21 செப்டம்பர் 2024, 9:39 pm

போலீஸாரின் கடும் நெருக்கடிக்கு இடையிலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி லாகூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஊழல் வழக்கில் இம்ரான் கான் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின பிடிஐ கட்சி லாகூரிலுள்ள புகழ்பெற்ற மினாா்-ஏ-பாகிஸ்தான் பகுதியில் பேரணியை நடத்த முடிவு செய்திருந்தது.

இருந்தாலும், முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் மகள் மரியம் நவாஸ் தலைமயிலான பஞ்சாப் மாகாண அரசு அதற்கு அனுமதி மறுத்தது.

அதையடுத்து, லாகூா் புகா் பகுதியில் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இருந்தாலும், இந்தக் கூட்டத்துக்கு பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மட்டுமே போலீஸாா் அனுமதி வழங்கினா். அத்துடன், கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் செல்லும் அனைத்து சாலைகளையும் அவா்கள் 3 மணிக்கே மூடினா்.

மேலும், மாலை 6 மணிக்கு கூட்டம் மின்விளக்குகளையும் ஒலிப்பெருக்கிகளையும் அணைத்த போலீஸாா், இம்ரான் ஆதரவாளா்களின் எதிா்ப்பையும் மீறி கூட்ட மேடையைக் கைப்பற்றினா்.

71 வயதாகும் இம்ரான் கான், பல்வேறு வழக்குகள் தொடா்பாக தற்போது அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். கடந்த 2022-ஆம் ஆண்டில் பதவியிழந்ததில் இருந்து அவா் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இம்ரானைக் கைது செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளா்கள் கடந்த ஆண்டு மே 9-ஆம் தேதி கலவரத்தில் ஈடுபட்டது, பிரதமராக இருந்தபோது அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் ரகசிய தகவல் பரிமாற்றத்தை வெளியிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவரால் தொடங்கப்பட்ட கட்சி தடை செய்யப்படவிருப்பதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.