ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாகிஸ்தானிலிருந்து ஈரான் சென்ற பேருந்து விபத்து: 28 பேர் பலி

பாகிஸ்தானிலிருந்து ஈரான் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் பலியாகினர்.

News image
ஈரானில் விபத்து
Updated On :21 ஆகஸ்ட் 2024, 5:49 am

PTI

தெஹ்ரான்: ஈரானில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டு தலத்துக்கு பாகிஸ்தானிலிருந்து சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில், 28 பேர் பலியாகினர்.

செவ்வாய்க்கிழமை இரவு, மத்திய ஈரான் மாகாணமான யாஸ்த் பகுதியில் இந்த விபத்து நேரிட்டதாகவும், மீட்புப் பணிகள் இரவு முழுவதும் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 28 பேர் பலியாகினர். 23 பேர் காயமடைந்தனர். அதில், 14 பேர் படுகாயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பேருந்து விபத்தில் சிக்கியபோது, அதில் 51 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஈரானில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்துக்கு பாகிஸ்தானிலிருந்து பக்தர்கள் சென்றபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.