போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெஹ்ரான் - வாஷிங்டன் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையைக் குறைப்பதையும், ராணுவ திட்டங்களை செயல்படுத்துவதையுமே அமெரிக்க அதிபரின் கருத்து நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2 நாள்களாக ஈரான் - அமெரிக்கா இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவு மற்றும் அதனால் ஏற்பட்ட நம்பகத்தன்மை காரணமாக ஈரானிய மின் நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் 5 நாள்களுக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார். இதனிடையே தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அதிபர் டிரம்ப் கூறியதை ஈரான் மறுத்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் தாக்குதல் பல்வேறு வகையில் நடத்தி வருகின்றன. இதில், ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உள்ளிட்ட ராணுட மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் பலியாகினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளில் உள்ள அமெரிக்க தளவாடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணை வழியே அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் வணிகக் கப்பல்கள் செல்ல ஈரான் தடை விதித்தது. இதனால் பிரிட்டனின் உதவியுடன் அந்நாட்டு ராணுவத்துக்குச் சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அரபிக் கடலில் அமெரிக்கா நிலை நிறுத்தியது.
இதனிடையே நேற்று அமெரிக்காவுக்குச் சொந்தமான எப்-15 ரக போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனை ஈரான் வெளிப்படையாக விடியோ வெளியிட்டு அறிவித்தது.
Summary
No dialogue between Tehran and Washington: Iran media
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்

ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



