வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பிணைக் கைதிகள் பத்திரமாக நாடு திரும்ப சிறப்புப் பிரார்த்தனை

ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

News image
Updated On :20 அக்டோபர் 2023, 7:24 am


டெல் அவிவ்: இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில், வியாழக்கிழமையன்று வெஸ்டர் வால் பகுதியில் கூடிய மக்கள், ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகள் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.

பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் ஏராளமானோர் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது, இப்படியொரு சிறப்புப் பிரார்த்தனைக் கூட்டம் ஜெரூசலேமில் நடைபெற்றது.

இந்த பிரார்த்தனைக் கூட்டத்தில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீரர்களின் நலனை வலியுறுத்தியும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், காஸா பகுதியில் இஸ்ரேலிலிருந்து 203 பிணைக் கைதிகள் வைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிக்க.. பேரிடர் ஒத்திகை: சிறப்பு ஒலியுடன் செல்லிடபேசிகளுக்கு வரும் குறுந்தகவல்

இஸ்லாமியர்களால் ‘அல்-ஹராம் அல்-ஷரீஃப்’ என்றும், யூதர்களால் ‘டெம்பிள் மவுண்ட்’ என்றும் அழைக்கப்படும் புனிதத் தலம், ஜெரூசலேமின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த வளாகத்தில்தான் இஸ்லாமியர்களின் ‘அல்-அக்ஸா மசூதி’யும்  யூதர்களின் வழிபாட்டுச் சுவர் உள்ளது. இந்தப் பகுதியில்தான் இந்த சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.

இஸ்லாமியர்களை பொருத்தவரை நபிகள் பயணத்தில் ஜெரூசலேம் இடம்பெற்றதாகக் கூறப்படுவதால் மெக்கா, மதீனாவுக்கு பிறகு மூன்றாவது முக்கிய வழிபாட்டுத் தலமாக அல்-அக்ஸாவைக் கருதுகின்றனர்.

6-ஆம் நூற்றாண்டு முதல் அப்பகுதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு செய்து வரும் நிலையில், கடைசியாக 10-ஆம் நூற்றாண்டில் தற்போதுள்ள அல்-அக்ஸா மசூதி கட்டப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.